Wednesday, 11 April 2012

என் பிரபஞ்சத்திற்கு,என் இனிய நண்பன் சிவத்திற்கு, இயற்கை எனும் பேராற்றல், 
பேரியக்க மண்டலத்திற்கு... எனது கோடான கோடி நன்றிகளை  வழியாக...
நான் உணரும் உணர்வுகள் வழியாக, ஒவ்வொரு கணமும்,நன்றி உணர்தலுடன் மகிழ்கிறேன்.நன்றி இறைவா.
எனதருமை பிரபஞ்சமே...எனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றமெனும் நல்லெண்ணத்தை நன்மை தரும் உணர்வாக மாற்றி என்னை நம்பிக்கை கொள்ள, என்னை தேர்ந்தெடுத்த,உன் தாராள கருணைக்கு மனதார நன்றிகள் கோடி.கோடிகள் பலவும் நிலைத்தபுகழ் கொண்ட தன்னடக்கம் நிறையவும் அதனை புரிந்து கொண்ட தெய்வபத்தினிகள்  பலவும் அதனால் விளைந்த செல்வப்பயிர்கள் பலவும்,
ஆனந்தமுடன் அவர்கள் கூடி களிக்கும்  சூழ்நிலைகள் சொர்க்க புரியாகாவும்,எங்கும் எப்போதும் செல்ல சொகுசு வாகனங்கள் பலவும் என ஏற்றமிகு புகழ் தந்து எண்ணிலடங்கா செல்வங்கள் எல்லாம் தந்து எனைக்காக்கும் இயற்கையே...இறைவனே.. எனதருமைநட்புக்கு பாத்தியமான எனதன்பு 
பிரபஞ்சமே...நன்றி.நன்றி.இந்த நன்றியறிதலுடன் 
நன்றிஉணர்வுபெருக்கெடுக்க..என்னை எப்பொழுதும் நல்லெண்ண அலை வரிசையில் முதன்மைப்படுத்து.முழுமைபடுத்து.
கவரப்படும் அனைத்து பொருட்களிலும்...என்னை காந்தப்படுத்து.சாந்தப்படுத்து.நன்றிஇறைவா.நன்றி.ஆக, 
நன்றியே நம்பிக்கை. நம்பிக்கையே நம் விதி. அதாவது நம் பாதை.  நம்பிக்கை விதியே உங்கள் மனதின் விதி.உங்கள் மனம் செயல்படும் முறையில்  நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.அதாவது நம்பிக்கையின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்.என்பது தான் இதன் பொருள். உங்கள் மனம் எதை நம்புகிறதோ அதனையே சிந்தித்து கொண்டிருக்கிறது. எல்லாமே சாத்தியம். இதுவே சத்தியம்.ஆசையே திறன். ஆசையே தீரம். அனைத்தும் அனுபவிப்போம் ஆசை தீர. புறத்தின் ஆளுமை அகம்.
 ஆக நன்றிகளால் அகத்தை நிரப்புவோம். முழுமைகளால் முதன்மைப்படுவோம்.   
நான் பேரறிவாளன்
எனக்கு பேரின்பமயமான எதிர்காலம், மேன்மை மிக்க 
வாழ்வியல் அனுபவங்கள், 
சிறப்பு வாய்ந்த சிந்தனைக் குவியல்கள், பேராற்றல் பலத்தோடு...உற்சாக ஊற்றாக, 
குதூகலத்தின் திலகமாக,
எல்லோருடனும் இணக்கமான இயல்பான... இப்படி எனக்காக காத்திருக்கும்  அபிரிமிதங்களை என் ஆழ்மனம் மட்டுமே அறியும்..
நன்றியறிதலின் பக்கங்களுக்காக,உணர்வுடன்...
நன்றியறிதல் என்பது உயரிய சிந்தனை என்பதை காட்டிலும் மகத்தான சக்தி.நமக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும்,தொடர்பு அலைவரிசையே இந்த நன்றியறிதல் உணர்வு. எல்லை இல்லாத,எல்லா வித ஆற்றலும் கொண்டது. இந்த நன்றியறிதல்.
பேணிகாக்க வேண்டிய ஒரே தன் மானம்,இந்த நன்றியுணர்வை தான். பூஜிக்க வேண்டிய உயரிய பக்தி நிலை இந்த நன்றியறிதல். ரசிக்க வேண்டிய அழகு சிற்பம்...இந்த நன்றியுணர்வு.
அப்படியானால் நன்றியை 
உணர்வாக கொள்வதே மகத்துவம். 
 உதாரணத்திற்கு.  ஒரு வலி.தாங்க முடியாத வலி.
"இறைவா,சற்று நேரம் நின்றால் போதும்"என்ற சூழலில்...பின்-அந்த வலி இல்லாத நிலையில், 
நாம் கூறும் நன்றி இறைவனுக்கு ஏற்புடையதல்ல.
காரணம்,அது,மனித மாண்புக்கும் கூட உரித்தானதல்ல.வலி இல்லாத, சிறு இடைவெளி வேளையில் நாம் அனுபவித்த அந்த சூழல் தான், 
நம்முடைய அன்றாட வாழ்வியல் அனுபவம்.
ஆனால் ஒரு கணமாவது சிந்தித்திருப்போமா? 
அல்லது சிந்திக்க வேண்டும் என்ற நல்லறிவாவது 
நம்மை தடுத்திருக்குமா? இந்நிலை களைவதே... 
நன்றியறிதல் பாடம்.உதாரணத்திற்கு ஒரு கால்குலேட்டர் வாங்கியிருக்கிறோம்... அல்லது 
அன்றாட,அவசிய,பயன்பாடான தீப்பெட்டியாக கூட இருக்கலாம்...அந்த பொருளை முதலில் யார் கண்டு பிடித்திருப்பார்கள்?அல்லது அவர்களுக்கு எவ்வாறு?
அந்த தூண்டல் ஏற்பட்டிருக்கும் என்று சிந்திப்பதும் நன்றியறிதலின் முதல் கட்டம்.இன்னும் விளக்கமாக..நாம் பணம் கொடுத்து வாங்கி விட்டோம்,என்னுடையது.என்றால்....?அது வெறும் பொருளாக மட்டுமே நமக்கு பயன்படும்.அந்த பயன் பாட்டின் முழுமை,அதாவது சீரான சுகம்,நமக்கு தடையுறும்.நம்முடைய அன்றாட நிகழ்வுகளே நமக்கு சான்று.! எல்லாமும் இருந்தும்... எதுவும் இல்லாதிருப்பது போலே...நம் தேடலே... சான்றின் அடுத்த விளக்கமும். ஆக,
நன்றி உணர்தல் என்பது,    
உங்களுடைய அந்த நன்றிக்காக, அந்த கால்குலேட்டர் உருவாக்கியவர்,
காத்திருக்கவில்லை.. ஆனால் 
உங்களின் அந்த நன்றி உணர்தலின் வழியாக 
அவரின் மூலம் அவரை தூண்டிய அந்த ஆழ்மனத்தின்  பிரபஞ்ச சக்தியை நீங்கள் நினைவு கூற ஏதுவாகும்.அப்படியாயின்..., 
அகன்ற இந்த பிரபஞ்சமே...நம்முடைய வெளிப்பாடு தான். என்ற பேருண்மையை அறியும் முயற்சியே  இந்த நன்றி உணர்வு,.ஆக நன்றி என்றால் என்ன ? எதற்காக இந்த கேள்வி என்றால்?
நாம் நிறைய வார்த்தைகளை அதன் நிறை குறை அறியாமலே நம் பயன்பாட்டில் கொண்டுள்ளதால் 
ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை  நாம் நன்றி கூறுகிறோமே?இதில் என்ன புது அர்த்தம் இருக்க போகிறது..,?நன்றி என்றால் உதவிக்கு,அல்லது 
உதவியதற்கு...இன் முகத்துடன் பாராட்டுவது. 
அல்லது பெருமைபடுத்துவது.இப்பொழுது நன்றாக சிந்தியுங்கள்...உங்களில் எத்தனைபேர்...?நன்றியை,
இந்த அர்த்தத்துடன் எதிர்நோக்கி இருப்பீர்கள்?
அல்லது கூறியிருப்பீர்கள்?.நிச்சயமாக,
முரண் இல்லாத பதிலில்,நாம் ஒத்துக்கொண்டு 
அடுத்த நிலைக்கு செல்வது கூட நன்றியறிதலின் மேன்மைகளின் ஒன்று. அதாவது அந்தந்த கணமே நன்றியறிதலின் சக்தி.அதை விட எளிதாக விளங்குவோமாயின்...உதவி கிடைத்த பின் 
பாராட்டுவதை விட முன்னரே நன்றி பாராட்டுதலே 
பிரபஞ்ச விதியின் செயல் விளக்கம்.அதாவது.. 
இறைவனை கண்ட பின் தான் நம்புவேன்,என்பதை காட்டிலும்,நான் காண விட்டாலும், காண முடியாவிட்டாலும் நம்புவேன்.என்பது மட்டுமே நம்பிக்கையின் மகத்துவம்.அது போலவே, 
கிடைத்த பின் நன்றி பாராட்டுவதென்பது...பொதி சுமக்கும் கழுதைக்கு ஒப்பானது.கிடைக்க பெறப் போகும் உதவிக்கோ?உன்னதத்திற்கோ?முன்னரே நாம் நன்றி உணர்வுடன் பாராட்டுவதென்பது,
செயலுக்கு ஊக்கம் அளித்து அச்செயல் வெற்றியடைந்தற்க்கான ஆற்றல்,உங்களிடமே உள்ள தென்ற உண்மை உணரும் நிலையே இந்த நன்றி உணர்தல். 
உதாரணத்திற்கு 
இந்த மாத்திரை சாப்பிட்டால் 
நிச்சயமாக "நான் குணமாகி விடுவேன்". என்ற நம்பிக்கைக்கும்...ஆதலால் இந்த மாத்திரையை பரிந்துரைத்த மருத்துவருக்கு நாம் கூறும் நன்றியே .. நம் நோய் தீரும், வழிகளுக்கான நியதி. 
அப்படியானால் தீராத வியாதிக்கு? நம்பிக்கையில்லாதனம்.அல்லது நம்பிக்கையை 
அல்லது நன்றியை வெறும்  பொருளாக..., பணமாக கொண்டு, கஞ்சத்தனமான போக்கு ஒன்றே 
தீராத வியாதிக்கான நிசப்தமான வெளிச்சம்.
அப்படியானால்..வறுமை காரணமாக.., பற்றாக் குறையினால்...,உள்ளவர்களின் நிலை?...? நன்றி.
இது நல்ல கேள்வி.முன்னரே நான் அறிவித்த நன்றியே...இதற்குண்டான பதிலை எடுத்தியம்பும்.
அதாவது,அபரிமிதங்களால் நிறைந்த இந்த பரந்த, 
எல்லையில்லாத பிரபஞ்சத்தில் பற்றாக்குறை என்ற ஒன்று இல்லை என்பதை அறியாமல் இருப்பதுவே மிகமிக கேலிக்குரியது வேதனைக்குரியது.ஈர்ப்பு விதிக்கு தடை எற்படுத்துவது. காரணம்?அறியாமை என்ற போக்கு 
பிற்போக்கு தனமான நிலைகளிலேயே நம்மை நிறுத்தும்.காரணம்?அறியாமை என்பதே நன்றியில்லாத தன்மை தான் ஆம். பிற்போக்குத்தனம் என்பது நிகழ்காலத்தில் நின்று கொண்டு இறந்த காலத்தின் அனுபவப்பதிவுகளை கொண்டே நம் வாழ்வை எதிர்நோக்குவதாலேயே இந்த சிக்கல்.அதாவது திரையில் கண்ட கதாபாத்திரத்தின் மரணத்திற்கு, கலங்குவதற்கு ஒப்பானது... இந்த வறுமையும்.இதனை எடுத்தியம்பும் அறியாமையும். இதனை மாற்றுகிறேன்...என்ற அரசியலமைப்பும்...,
இவர்கள் நம்மை உயர்த்திவிடுவார்கள்,என்று காத்து கிடக்கும்...அவ நம்புக்கைகளும்.
என எல்லாமும்.நன்றி உணர்வு கெட்டு விட்டத்தின் 
உட்சமே தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே. 
பிரபஞ்சத்தை ஏவி 
பிரபஞ்சத்தின் ஏவளுக்காக... 
நன்றியறிதலுடன்  காத்து நிற்கும் 
எண்ணம் K 

Tuesday, 10 April 2012

இது,பிற்போக்குத்தனமான-நம்முடைய இன்றைய சூழலுக்கான நிதர்சனம்.ஆம் இதுவும் ஓர் அகராதி.

                                                                                       அம்மா 
மூலம்.முதன்மை. உணர்வின் வெளிச்சம்.உச்சத்தின் விடை.
உயிரின் உறை.உள்ளது உள்ளபடியே யாயினும்  பரிணாமத்தின் முகவரி.
உயரம். என எல்லாமுமாய்.                                                    தெய்வம்
தெரியாதது.தெரிந்து கொள்ள  தூண்டுவது.தெரிந்தது. தெரிந்து கொள்ளாதது போல் இருப்பது.பொய் .இதுவே உண்மையில்  மெய்.
பொய்யிற்கும் மெய் பேசுவது. பேசப்படாதது.
பேசாதது.
                                                                             இறைமொழி
சிவன் சொத்து குல நாசம்.விந்தைபற்றியவிந்தை
                                                                                  வாழ்க்கை
நான்கு பேர் சம்மதத்துடன்..நான்கு பேராக மட்டும் மாறும் உரிமை.நான்கு பேருக்காக.. சுமந்ததிலிருந்து சுமக்கப்படும் வரை. நல்லதை தெரியாத,நன்மை பிடிக்காத உறவுகள்...
நண்பர்கள்....சுற்றம்.... உற்றார்-என நான்கு பேருக்காகவே என்ற பித்து நிலை.
                                                                                   மயக்கம்.
ஞானியாரின் விழிப்பு நிலை.
பால் தரும் கன்றை தின்பதா? 
என்பது தொட்டு,பாலை கறக்காத ஆடு கடல் புஷ்பம் 
என்ற மீன் வரை சைவம் பேசும் அக்றிணை  சொல்.
ஈர்ப்பு என்பது விசையா?
விளைவா? என்பதறியாமல் 
வினை என்ற கண் கொண்டு 
மேலிருந்து கீழா?கீழிருந்து மேலா ? என புரியாமல்...உயிருடன் இருந்த ஆப்பிள் வான் ஈர்ப்பு தீர்ந்தவுடன் கீழ் விழுந்தததை,புவி ஈர்ப்பு என கண்டு கொண்டு...
உயிரற்றதர்க்கான ஈர்ப்பை அடிப்படையாக கொண்டநமது கண்டு பிடிப்புகளை உயிருக்கான 
முன்னேற்றம் என கொள்வது.
                                                         அறிவியல் மருத்துவம்.
என்னையும் என் குடும்பத்தையும் ஒரு மிருகம் தாக்கலாம் என்பதற்காக,அல்லது தாக்குகிறது என்பதற்காக பலம் பொருந்திய மிருகத்தை 
நாங்களே வளர்த்ததனால் பின் மாண்டோம்., வளர்த்த மிருகத்தால்.வரும் என்ற மிருகம்  வரவில்லை.உண்மைதான்.நாங்கள் மாண்டதும்  உண்மைதான்.
                                                                                 விபச்சாரம்
கல்விச்சாலை.                கூலிக்கு பெறுவது                       கல்வியும்-கலவியும்.
                                         சுய இன்பம்
தனக்கு தானே முயற்சி செய்து தானே சம்பாதித்து 
சமுதாயத்தின் தனி மனித 
அர்த்தத்துடன் வாழ்வது.
                             ஓரினச்சேர்க்கை
ஆணுறை அணிவது. அல்லது 
குடும்பகட்டுபாடு செய்தபின் உடலுறவு கொள்வது.குறிப்பாக உயிர் உருவாகி விடகூடாதென்பதின்  ஒற்றுமை முயற்சி.
                                                                                            மடமை
குடும்பம் என்ற ஆலமரத்தை ஒரு விழுது, இரு விழுது போதும் என்றும்... அது தான் பாதுகாப்பு 
என்னும் எல்லை போட்ட அறிவாளித்தனம்.
                                                                                                ருசி
தேடல்.ஈர்ப்பு.கவர்ச்சி.வேகம்.ஆக,அடிப்படை
தெரியாமல்....தேர்ந்து,சேர்ந்து கொண்டது.
                                     பலாத்காரம்
பதினான்கு வயதில் பருவம் எய்திய விளை நிலத்தை விலை நிலமாக்க மனை பிரிப்பது,மணம் முடிப்பது.
இருபத்திரெண்டென்று,,,.
காலம் கழித்து. 
                                             கற்பழிப்பு
உணர்வென்ற அறிவை  நம்பாமல்  கட்டணம் தந்து கல்வியை திணிப்பது. பணம் கொண்டு மணம் கொள்வது.மரம் வெட்டுவது.மன்னிப்பு கோருவது.
நியாயம் தேடுவது.
                                                                                     நம்பிக்கை
ஆதாரத்துடன்...உடன் படிக்கை எழுதி அறுபது கையெழுத்துடன் பத்திரப்படுத்துவது.
                                                                                   அறியாமை
பிச்சை என்பது தெரியாத வேட்பாளர்களிடம் 
பிச்சை வாங்குவது. குழந்தைகளே செல்வம் 
என்பதை மறந்து செல்வம் இல்லை என்று 
குழந்தைகளை குறைப்பது பின் அதுவே 
அறிவாளித்தனம் என்று குரைப்பது.
                                                                                      பாதுகாப்பு
உயிர்கொல்லி மருந்து.அல்லது தூக்க மாத்திரை. 
அரசியல் தலைவர்கள். மத விற்பன்னர்கள்.
தொலைகாட்சி வானிலை அறிக்கை. 
                                                                                    ஆணுறை
படுக்கை போரின் கவசம்.ஆண்மை இழந்தவர்களின்  நம்பிக்கை.கற்பின் சூட்சுமம். 
உயிர் வேட்க்கையரியாத உடல் வேட்கையின் களவு.அரசாங்கத்தின் அறிவுரை. அழகியரின் ஆண்டவன்.அசிங்கம். மான பங்கத்தின் பங்காளி.
                                                                                   இலட்சியம்
கணவனை மதிக்க தெரியாத பெண்களின்.... 
குழந்தை பாசம்.குமரிகளின் தாபம் புரியாத,
சமுக ஆர்வலகளின் சமுதாய சேவை.
                                                          தொலைகாட்சி செய்தி 
தங்க விலை சரிவும். வரும் மழைக்கான வானிலை அறிக்கையும். 
                                              சர்க்கரை
நிச்சயம் ருசிக்கானதல்ல.
இன்று எல்லோர் உள்ளத்திலும்.
                                                      கூலி
விசுவாசம்.
நன்றி கெட்டத்தனம்.
                                                                                          சம்பளம்
நாணயத்திற்கான நாணயம் விடுதல்.                  கால் நடைகளின் உணவு.
                                                                                                    சூது
தர்மம் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்.
                                                                                                கடன்
நேர்வழி அல்லாத தீய வழிக்கான தேடல். பெறுவதிலிருந்து பெரும் தோற்று நோய். பரிதாபம்.பாவச்செயல்.                                 உறவுகளின் எல்லைகோடு.
                                                                                   தீண்டாமை
மனப்பாடம் செய்வது.
                                                                                             கற்பது
மனநோய்.பநோய். குண மற்றசெயல்.மணமற்ற செயல்
                                                                                             உணவு
கழிவுகளால் உருவாவது. கட்டாய கல்வி. நோயிற்கான தேடல். உளவியல் குற்றம். 
வன் சொல்.
                                                                                                மதம்
யானை போல காட்டுக்குள்ளும். நாட்டுக்குள்ளும். 
                                                                                          மனிதன்
ஓசைக்காக பிளவு பட்டவன். இரை தேடுவதிலிலேயே இரைச்சலானவன்.இறைச்சி.
இயற்கையை இம்சிப்பவன். போலியை மட்டுமே விரும்புபவன்.
                                                                           விஞ்ஞானிகள்
வக்கிரம்.குற்றவாளி.குளிர்ச்சியைஅனலாக்கியவன்.
கீழானவைகளில் மேலானவன். தொலைவதற்க்காக தேடுபவன். சந்தேகவாதி.
சந்தர்ப்பவாதி.எல்லாம் தெரிந்த பாமரன்.
ஒன்றும் தெரியாமல் ஒன்றி போனவர்கள்.
ஒன்றேன்டறியாமல்...,பரிணாம வளர்ச்சிக்கு 
தடை விதித்தவர்கள் 
                                                                                            ஞானம்
காக்கா குளியல்.நுனிப்புல் மேய்ச்சல்.வெற்றுச்சொல்.
எல்லோருக்கும் தெரிந்தது. 
எதுவும் தெரியாதது.
                                                     மம்
அகராதி.அடங்காதது. சர்வாதிகாரி.கோல் மூட்டி.
அர்த்த பேதம். உணர்வுக்கடிகாரம்.உடல் மேய்ந்த்தவன்.பறப்பன.
                                                                                               தாயி 
தாமதமான தாவரம்.தா என்பது ஈகையானது. ஈயை போல கழிவுகள் அறியாதது.கற்றாலும் கற்பித்தாலும் கலங்கம் இல்லாதது
                                                                                            குற்றம்
இந்நூலை இலவசமாக பெறுவது. 
                                                                                          புத்தகம்
கற்காமல்...அழகுக்காக அடுக்கி வைப்பது.
                                                                                                குரு
கோள்களில் ஒன்று.அறிந்த தீயவன். அறியாத ஆசிரியன்.ஆயிரம் பொய்களின் கூட்டுத்தலைவன்.ஆள் கொல்லி. மாண்றியாதது.உயிர் உள்ள ஜடம்.
                                                                                         அர்த்தம் 
இல்லாதது.ஆற்றலை அவனென்று,பின் அவள்  என்பது.பரந்து விரிந்த பரமானந்தத்தை பத்துக்கு பத்தில் சுருக்குவது.கண்கண்ட தெய்வம் என்று 
தாயை அநாதை இல்லத்தில் விடுவது.தாசி என்று பழிக்கும் காலைபொழுது தாயென்று முனகும் மாலைபொழுது. 
                                                                                        தாரம் 
தரம் அறியாதது.
                                                                                     அனுபவம் 
பொதி சுமப்பது.செரிமானத்திற்கு ஒவ்வாத இறைச்சி.புதைக்கப்படாத பிணம்.இம்சை. பித்தலாட்டதனம்.சுய உணர்வின் எதிரி.
சிந்தனையின் சோம்பல்.பொறுமையின் பிறப்பிடம்.அவமானத்தின் நண்பன்.
                                                                                              ஆசை 

எல்லோரும் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள விட்டு விட சொல்வது.உயர்களின் உன்னதம்.இறையின் மறை பொருள்.வேதம்.   
                                         எண்ணம் k 
தன்னைத்தானே சுற்றி 
சூரியனையும் சுற்றும் பூமி போல....இவனும் தன்னை சாமியென்று கர்வித்து கொள்பவன்.ஆம்,தன்னை
தானே கற்பழித்து தானே தன்னை பிரசவித்துக் கொண்டவன்.